வாழ்த்துரை ஏடு எடுத்து கவி படித்தார்… நாடு நிலைமையை கவி வடித்தார். என இந்நூல் வாயிலாக ஜி.இரகுபதி சந்திரசேகர் என்னும் விகனைப் பார்க்கிறேன். கவிஞர் விகன் அவர்களின் கவிதைக்கான மொழி எளிமையானது. பிசிறுகள் அற்றது. அவரின் கவிகள் வாசகனுக்கும் அனுபவத் தொற்றலை ஏற்படுத்தி அவனையும் கவிதையுடன் ஒன்றிறுக்கச் செய்கிறது. இவரது உணர்வும் உள்ளடக்கமும் வடிவமும் இணைந்து கவிதையாக மிளிர்கிறது. இவரது கவிதைகளில் பல்வேறு விதமான மனிதர்கள் வந்து போகிறார்கள். இயற்கைக்காட்சிகள், சோகங்கள் படிமங்களாகப் பதிவு பெறுகின்றன. கவிதையைப் படைக்கச் சொற்களால் வரம் பெற்றவர்கள் ஒரு சிலர்தான். அந்தச் சிலரில் கவிஞர் விகன் அவர்களும் ஒருவராகத் திகழ்கிறார். சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் பதிவு செய்யப்பட வேண்டிய பிரதிகள் பலவற்றை மனதில் சுமந்து கொண்டேதான் வாழ்ந்து வருகிறான். ஆனால் பலருக்கு அதனை அச்சில் கொண்டு வரும் வாய்ப்பும் சூழலும் அமைவதில்லை. இன்றைய கணிப்பொறி அச்சு முறையின் வருகை எல்லோருக்கும் நூல் எழுதும், அச்சிடும், வெளியிடும் பணிகளை எளிமைப் படுத்தியிருக்கிறது. ‘ இரண்டு’ என்னும்...